Sunday, October 26, 2008

என் அவள்

கண்கள் இரண்டின் வீச்சில் காயம் அடைந்தது மனம்!
கொவ்வைச் செவ்விதழ்கள் சிந்திய முத்தம் உயிர்த்தது உயிர்!
கொஞ்சு தமிழ் பேச்சில் புது இலக்கியம் பிறந்தது!
உன்னை எண்ணி இருந்ததால் எமனும் என்னை நெருங்க வில்லை!


உன் ரோஜா மலர்க் கைகளை வண்டுகள் நாடுகின்றன!
என் விரல் நகம் தீண்டவும் விடாமல் மூடிக் கொள்கிறாயே?

பூவின் குணம் மனம் பரப்புவது!
தாயின் குணம் அன்பு செய்வது!
நீ தாயாகப் போகும் பூ அல்லவோ!
கண்ணே என் இந்தப் பாராமுகம்?

வடக்கு நோக்கிய காந்த ஊசி போல்!
என் மனம் எப்போதும் உன்னை நோக்கியே!

No comments: