Monday, December 22, 2008

நீயா நானா ஆசிரியரும் மாணவரும்

இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாணவர்களில் பலர் ஆசிரியர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று விவாதம் தொடக்கி வைத்தனர்!

பதில் சொன்ன பெரும்பாலான ஆசிரியர் தாங்கள் தங்கள் அறிவினை கூர் தீட்டி தான் வைத்து இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

ஆனால் விஜய் டிவி தொகுப்பாளர் ஆசிரியர்களுக்கு இரு சிறப்பு விருந்தினர்களையும் தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு மௌனம் சாதித்த ஆசிரியர்களை குற்றம் சாடுவது எந்த வகையில் சரி?

அங்கு வந்து இருந்த பெரும்பாலான ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் பணி செய்பவர்கள். மேலும் அவர்கள் தங்கள் துறை பற்றிய அறிவினை மட்டுமே மேம்படுத்திக்கொள்ள கடமைப் பட்டவர்கள். ஒரு கணித ஆசிரியர் தன் பாடங்களில் மிகவும் தேர்ச்சி பெற்று தன் துறை சம்பந்தமான கட்டுரைகளைப் பெற்று மேலும் படித்தல் மட்டுமே அவரை மேம்படுத்தும்.

இந்தியாவில் தற்போதுள்ள அனைத்து அறிவு சார் ஆராய்ச்சி நிலையங்களில் பணி செய்யும் மக்களும் தங்கள் துறை தவிர வேறு விஷயங்கள் அறியார். இது உலகுக்கும் பொருந்தும்.

எனவே ஆசிரியர்கள் தாங்கள் கற்றுத் தருவதில் மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்றாலே போதுமானது. ஊரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை.

வந்த சிறப்பு விருந்தினர்க்கு அண்ணா பல்கலையில் பணி செய்யும் மிகப் பெரிய ஒரு அறிஞரின் அறிமுகம் உண்டா என்றால் என்ன சொல்ல முடியும்?

ஆனால் அவர்களின் கருத்துக்கள் ஆழமானவை.
ஆசிரியர்கள் மாணவர்களை குற்றவாளிகளைப் போல் கருதக் கூடாது.
தங்கள் துறை புதிய செய்திகளை அறிய வேண்டும்.
இவையே அவர்களை வழிநடத்தும்.

எனக்கு " வெள்ளை புலி " பற்றி அறிய வேண்டிய தேவை இல்லை. இதிலும் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

Monday, December 8, 2008

சாதிகள் வாழ்க!

நம் மக்கள் எப்போதும் தங்கள் குறைகளை மறைத்து மாற்றார் குறைகளை பெரிதாக எண்ணி குமைவதில் வல்லோர்!

பெரியார் தொடங்கிய சுய மரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்று சொன்னதன் முக்கிய காரணம்!

மக்கள் ஒருவரை ஒருவர் இழிவு செய்து தாழ்த்தி வாழ்தலுக்கு முக்கிய காரணமாக கடவுள் இருக்கிறார் என்று ஏற்று கொள்வதே!

பெரியாரின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்பதாக கூறிகொண்டாலும் நம்முள் இன்னும் சாதிப் பித்து நீங்க வில்லை.

தன்னை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் தன்னை மேலானவன் என்று சொல்லிக் கொள்ளவும் சாதி என்ற சங்கிலியில் தன்னை பூட்டிக் கொள்கின்றான்!

சமூகத்தில் தீண்டாமை என்னும் தீ தன்னை சுடும்போது எதிர்த்து குரல் கொடுக்கும் அதே வேளையில் தன்னால் மற்றவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது
எந்த மாற்றமும் கொள்வதில்லை!

கடவுளை ஏற்றுக் கொண்டு உலக நாடுகளில் மக்கள் ஒருமையோடு வாழும் வேளையில் இங்கு சாதி, சடங்கு, சாதகம், கர்மம் என்று பல்வேறு பட்ட குழப்பங்களில் சீரழிந்து வருகிறோம்!

யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்று வாழ்ந்த மக்கள் இன்று தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளில் சிக்கி தவிக்கிறோம்!

கடவுளை ஏற்றுக் கொள்வது கொள்ளாதது அவரவர் விருப்பம்!
ஆனால் கடவுள் பெயரை சொல்லி நம்மில் பிரிவுகளை ஏற்படுத்தி வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

பிறந்த நேரம் மட்டுமே ஒருவன் வாழ்வை நிர்ணயிக்கும் என்ற நம்பிக்கையில் நாம் செய்யும் தவறுகளை எப்படிக் களைவது?

நம் சமய முன்னோர்கள் இந்த கோள்களை விட கடவுளை நம்பியவர்கள்!
ஆனால் நாம் கடவுளை விட்டுவிட்டு ஆசாமி சொல்லும் சோதிடத்தில் நம்மை
மூழ்கடித்து உள்ளோம்!

சாதிகள் இல்லையடி பாப்பா! என்ற பாரதியின் வார்த்தைக்கிணங்க
நம்மில் நம்மை நேசிக்கும் மனதை பெறுவோம்!