Sunday, October 26, 2008

ஈழத் தமிழர் கண்ணீர்

மனித உணர்வுகள் எல்லோர்க்கும் ஒன்றென்றால் ஏன் ஈழத் தமிழர் கண்ணீர் என்னைச் சுடுகிறது? மாற்றானைக் குளிர்விக்கிறது?

சிந்தனை ஒன்றுடையாள் என்றானே பாரதி ! இங்கு என் ஒரு கை பற்றி எரியும்போது மற்றொரு கை புதுப் பட்டாசு வெடிக்கிறதே?

அன்று தமிழனை துரத்தினான்! இன்று வட இந்தியனை!
நாளை? தன் உடன் பிறந்தோனையா?

அடிமை இந்தியா ஒன்றாய் எதிர்த்தது வெள்ளையனை அன்று!
விடுதலை இந்தியாவில் எம்மை யாமே எதிர்க்கிறோம்!

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று அறிவியல் சொல்கிறது!
நம்மை நாம் அழித்து யாரோடு வாழ்வோம்?

No comments: