Tuesday, January 13, 2009

தற்பெருமை!

மனிதன் தன்னைப் பற்றி பெருமிதமாக நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தான் தான் உயர்ந்தவன் என்னும் மனப்போக்கு அவனைப் படுகுழியில் தள்ளி விடும்.

தன்னைப் பற்றி மிகவும் சிறப்பாக மற்றவர்கள் பொய்யானச் செய்திகளை சொல்லும் போதும் அதை கேட்டு மிகவும் மகிழ்தல் ஆனது ஆனைத் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுகொண்டதைப் போலாகும்.

நமக்கு எழுத தெரியும், எழுத இடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மனதில் நினைப்பதை எல்லாம் எழுதி இணையத்தில் விட்டால் நம்மையும் நம் சுற்றத்தாரையும் பற்றி நிச்சயம் பெரும்பாலானவர்கள் நல்ல விதத்தில் நினைக்க வாய்ப்பில்லை.

இணையத்தில் வரும் செய்திகளுக்கு கமெண்ட் எழுதுகிறேன் என்று மிகக் கீழான
சொற்களை எழுதுபவரின் மன அழுக்கு உலகில் எல்லோருக்கும் படம் பிடித்தது போல் தெரிந்து விடுகிறது.

அடுத்தவரை மிகவும் தாழ்வாக நினைப்பதும் பிறரிடம் இருந்து தனக்கு ஏதாவது தேவைப் படுகிறது என்றக் காரணத்திற்காக அவரைப் பற்றி மிகப் பெருமையாக இல்லாத விசயங்களை சொல்லி தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் மனிதனை
மேலான நிலைக்கு கொண்டு செல்லாது.

எல்லோரோடும் அன்போடு பழகுவோம். இணையத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தவிர்ப்போம். இல்லையேல் நாளை சமுதாயம் நாம் உண்மையாக செய்து இருப்பதையும் பொய் என்றே நினைத்து நம்மை இகலும்.

No comments: