Saturday, January 31, 2009

காதலியின் கடைக்கண்

நினைவில் நின்ற மலர்விழி பெண்ணின்
இருகரம் பற்றி அவள் இதழிடை என்
உள்ளத்தாமரை மலர இதழ் குவித்து
நெஞ்சில் சாய்ந்து இன்புற்று மகிழ
எண்ணும் மனமே! உன் எண்ணக்
கருத்தை அவள் உள்ளம் ஏற்கும்
வண்ணம் எடுத்தியம்பும் வண்ணக்
கவிதை ஒன்றை வரைந்திட
துணை செய்வாயா?


கண்ணோடு நோக்கி!
உள்ளத்தொடு கலந்து!
நினைவோடு வாழ்ந்து!
உடலோடு மறைந்தோம்.

No comments: