Saturday, January 31, 2009

எல்லாம் அவள்/அவன் தான்!

நம்மில் மேலான ஒரு தெய்வம் உண்டென்று
கொண்டு காணும் இடமெலாம் அவன் வாழும்
இடம் என்று கண்டு; நுகரும் காற்றேலாம் அவன்
சுவாசமெனும் தெளிவுற்று வாழும் உயிரெலாம்
அவனுடை உயிரென எண்ணி உளம் களிப்பெய்தி
இன்புற்று மகிழ்வோடு வாழி நீ மனமே!



கண்ணின் ஒளியில் உலகின் உயிரெலாம் மகிழ்ந்து
வாழ வழி செய்யும் தாயே!
நின் மலர்ப் பாதம் பற்றி வணங்கி வாழும்
இவ்வேழை கேட்கும் வரமெலாம் தந்து
இவ்வையம் இன்புற அருள் செய் தேவி!

பயிரெலாம் காணும் இடமெலாம் வளர்ந்து
நிறைக்கும் நிலத்திடை வற்றாத நதி வெள்ளம்
பாய்ந்து பெருகி நகரினுள் மக்களெலாம்
பிரிவின்றி அன்போடு இன்பத்து நிறைவோடு
தம் மக்கள் குழாமோடு கலந்து மகிழ்ந்து
வாழ வேண்டும் அம்மா நின் அருளாலே!


ஆக்கமும் போற்றலும் பெருகி நின்றங்கு
உள்ள உயிரெலாம் இன்புற்று வாழ வழி செய்திட
என்னை கருவியாக்கு இறைவா!

!!
!!
!!

No comments: