Monday, December 22, 2008

நீயா நானா ஆசிரியரும் மாணவரும்

இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாணவர்களில் பலர் ஆசிரியர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று விவாதம் தொடக்கி வைத்தனர்!

பதில் சொன்ன பெரும்பாலான ஆசிரியர் தாங்கள் தங்கள் அறிவினை கூர் தீட்டி தான் வைத்து இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

ஆனால் விஜய் டிவி தொகுப்பாளர் ஆசிரியர்களுக்கு இரு சிறப்பு விருந்தினர்களையும் தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு மௌனம் சாதித்த ஆசிரியர்களை குற்றம் சாடுவது எந்த வகையில் சரி?

அங்கு வந்து இருந்த பெரும்பாலான ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் பணி செய்பவர்கள். மேலும் அவர்கள் தங்கள் துறை பற்றிய அறிவினை மட்டுமே மேம்படுத்திக்கொள்ள கடமைப் பட்டவர்கள். ஒரு கணித ஆசிரியர் தன் பாடங்களில் மிகவும் தேர்ச்சி பெற்று தன் துறை சம்பந்தமான கட்டுரைகளைப் பெற்று மேலும் படித்தல் மட்டுமே அவரை மேம்படுத்தும்.

இந்தியாவில் தற்போதுள்ள அனைத்து அறிவு சார் ஆராய்ச்சி நிலையங்களில் பணி செய்யும் மக்களும் தங்கள் துறை தவிர வேறு விஷயங்கள் அறியார். இது உலகுக்கும் பொருந்தும்.

எனவே ஆசிரியர்கள் தாங்கள் கற்றுத் தருவதில் மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்றாலே போதுமானது. ஊரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை.

வந்த சிறப்பு விருந்தினர்க்கு அண்ணா பல்கலையில் பணி செய்யும் மிகப் பெரிய ஒரு அறிஞரின் அறிமுகம் உண்டா என்றால் என்ன சொல்ல முடியும்?

ஆனால் அவர்களின் கருத்துக்கள் ஆழமானவை.
ஆசிரியர்கள் மாணவர்களை குற்றவாளிகளைப் போல் கருதக் கூடாது.
தங்கள் துறை புதிய செய்திகளை அறிய வேண்டும்.
இவையே அவர்களை வழிநடத்தும்.

எனக்கு " வெள்ளை புலி " பற்றி அறிய வேண்டிய தேவை இல்லை. இதிலும் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

No comments: