நீ பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை!
என்னை அலட்சியம் செய்வதாய் இருப்பினும்!
உன்னிடம் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் ஒன்றே!
உன் தற்பெருமை!
உன் மொழி ஆற்றல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது!
இத்துனை கோபத்தில் சொற்களை கோர்க்கலாமா!
உனக்கு பிடித்த கவிதை வரிகளும் என்னைக் கள்
குடித்த போதை கொள்ளச் செய்கின்றன!
உன் அழகிய இதழ்ப் பூ உதிர்க்கும் சொற்கள் அத்தனையும்
சேகரிக்க என்னிடம் இல்லை பை!
மலர்கள் எப்போதும் அழகாய் இருந்தாலும் நீ மட்டும் ஏன்
சில நேரங்கள் கோபம் கொள்கிறாய்!
உன் மனதுள் இருக்கும் என்னை உன்னால் எதிர்த்துப்
பேச முடியுமா?
Wednesday, November 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கஷ்டம்தான்
நன்றி அண்ணாமலையான்,
Post a Comment