Wednesday, November 5, 2008

மாந்தர் அன்பு

மண்ணில் வாழும் எல்லா மக்களும் நட்போடு வாழ வழி செய்ய வேண்டும்!
விண்ணில் நாம் செலுத்தும் கோள்கள் நம்மை ஒருவரோடு ஒருவர்
கலந்த பேச வழி செய்கிறது!

நாம் ஏன் மனத்தளவில் பிரிந்து வாழ வேண்டும்?
எல்லோரும் ஒரு தாய் மக்களாக வாழ்தல் நமக்கு நன்மையன்றோ!

உன்னைப் பெற்றவளும் என்னைப் பெற்றவளும் நம் நலன் நாடி வாழ்ந்தார்!
நம்மில் ஒருவரை ஒருவர் பகைத்தால் அவர் தம் உள்ளத் தவிப்பு என்ன செய்யும்?

கண்ணில் ஒன்றை ஒன்று பகைத்து வேறு காட்சி கண்டால் வருவது தலைவலி!
நம் எண்ணக் குளறுபடி நமக்குத் தரும் மனத்தில் வலி!

நாம் வாழ்வது நம் சந்ததிக்காக!
நம்மை நாம் வெறுத்தால் நம் சந்ததி எப்படி வாழும்?

திறக்கட்டும் நம் உள்ளக்கதவு !
குடியேரட்டும் அதில் மாந்தர் எல்லாம்!

கைகள் விரிந்து அணைக்கட்டும் ஆருயிரை எல்லாம்!
பார்வை விரியட்டும் மண்ணில் உள்ள மக்கள்
எல்லோரையும் தாய்மையோடு நோக்க!

என் பாதை எப்போதும் வழி தரட்டும் எல்லோருக்கும்!

No comments: