Saturday, November 15, 2008

மனம் என்னும் தோட்டம்

மனம் எப்போதும் தூய்மையே செய்ய என்ன வேண்டும்!
யாரோ ஒருவன் எப்படியோ போனால் என்ன என்று
விரக்தி நிலை அடைந்தால் அது நம் எண்ணம்
பிறக்கும் மனதை நிச்சயம் பாதிக்கும்.

வழியில் யாரோ வலியால் துடிக்க நமக்கு என்ன என்று போவதில்
நம் கையால் ஆகாத்தனம் மட்டுமே வெளிப்படும்!
ஆனால் அவன் துன்பம் அவனுக்கு தேவையானதே என்று நினைத்தால்?
நம் மனத்தில் எதோ விலங்கு எண்ணம் வந்து விட்டதன் அடையாளமே இது!

பாரதியும் மற்றும் சமூக சிந்தனையாளரும் நமக்கென்ன என்று விட்டு
சென்றிருந்தால் நாம் சமூகம் இன்னும் கீழேயே இருந்திருக்கும்.

வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் மனம் இல்லாவிடினும் தன்
முன்னால் துன்பப் படும் மனிதனைக் கண்டு மனத்தில் ஒரு சிறு சலனமும்
இல்லையானால்?

நம் மனம் என்னும் தோட்டத்தில் ரோஜாக்கள் பூக்காவிட்டால் பரவாயில்லை!
கற்றாளை பயிர் செய்யாமல் இருப்போம்!


இன்று அயலான் வீடு பற்றி எரிகிறது என்று வாளாயிந்தால் நிச்சயம்
நாளை நம் வீடு பற்றி எரியும்போது பார்க்க நாம் இருக்க மாட்டோம்!

நம் மனதை எப்போதும் மனித நலனில் அக்கறை கொண்டதாக வைப்போம்!
இல்லையெனில் நாம் மனிதனா என்று நம் வருங்காலம் நம்மை எள்ளி நகை செய்யும்!

மனதில் வளர்ந்து விட்ட களைகளை இனியாவாது பிடுங்கி எறிவோம்!
மனிதனாக வாழ முயல்வோம்!

No comments: