Thursday, November 13, 2008

கற்பனை

கற்பனை வாழ்க்கை

பள்ளிக்கு சென்றேன்
கல்லூரிக்கு சென்றேன்
வேலைக்கு சென்றேன்
கல்யாணம் செய்தேன்
குழந்தை பெற்றேன்
வளர்த்தேன்
வாழ மட்டும் மறந்தேன்!


தற்கொலை!

தன்னை அழித்து
தன் சொந்தங்களை
துடிக்க செய்து
இறப்பது எந்த வகையில்
மானுடம்!

மானம்
மானம் அழிந்தபின் வாழாதே!
அது சரி மானம் என்பது என்ன?


காதல் தோல்வி!

ஒருவரை ஒருவர் வெறுத்து வாழும்
வாழ்வில் பயன் என்ன?
என்னை நோக்கி நீ புன்னகை
நான் என்ன செய்ய வேண்டும்?


நிலவின் மிச்சம்!

உன் முகம்?



நாட்கள்!

ஓடும் கடிகார முள்ளுடன்
போட்டி போட முடியாமல்
கடத்துகிறேன் நாட்களை!


மழை!

பெய்யும் போது சுகம்!
வீடில்லாத தெரு வாசிக்கு?


நட்பு!

என்ன கொடுத்தால் பெறலாம்?
மாறாத கட்டுப்பாடில்லா அன்பு கொடுத்தால்!

தாய்!

எப்போதும் அன்பினைக் கொடுத்து
அன்பினை மட்டுமே ஏற்கும் ஆலயம்!

உலகம் அன்பு மயமாகும்!
எல்லோரும் தாய்மை அடைந்தால்!

No comments: