Thursday, September 10, 2009

உளுத்தங்கஞ்சி

இது ஒரு மீள் பதிவு!

இன்று நாள் முழுதும் உளுந்து கஞ்சி செய்முறை தேடினேன் . கிடைக்கவில்லை.

எனவே எனக்கு தெரிந்தது இங்கே!

உளுந்து (வெள்ளை) நூறு கிராம்
வெல்லம்/சர்க்கரை ஐநூறு கிராம்
ஏலம் சிறிது
சுக்கு அல்லது இஞ்சி சிறிது

நன்றாக ஆறு மணி நேரத்துக்கு மேல் ஊறவைத்த உளுந்தை மையாக அரைக்க.
எனக்கு அவ்வளவு நல்ல அரைக்கத் தெரியலனு சொன்னா நான் என்ன செய்வன்?

பாத்திரத்தில் நீர் கொதிக்கும்போது அரைத்த உளுந்தை கலந்து அடி பிடிக்காமல்
கிண்டிக் கொண்டே இருக்க.

தேவையான சுவைக்கு ஏற்ப சர்க்கரை கலந்து நன்றாக மணம் வரும் வரை அடுப்பில் மித வெப்பத்தில் காய்ச்சவும்.

ஏலம் சுக்கு நன்றாக தூளாக்கி காய்ந்த கஞ்சியில் போட்டு இறக்கவும்.

சுவை மிக்க நலம் கொண்ட கஞ்சி ரெடி.

இதைத் தேங்காய்ப் பால் என்று எங்கள் ஊரில் விற்பார்கள்.
வேறு முறை இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
!
!
!

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உளுத்தகஞ்சா ..........புதுசா இருக்கு ........ உங்க பதிவு nice ........

வாழ்த்துக்கள்

இவண்
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்

Jaleela Kamal said...

இது பெண்களுக்கு பூபெய்திய நேரம் இடுப்பெலும்பு பலம் பெற கொடுப்பார்கள்,

இதில் சர்க்கரையின் அள்வு அதிகமாக இருக்கு.

இது சாப்பிட்டு இருக்கேன் செய்ததில்லை, உளுந்து வட்லாப்பாம்., நேரம் கிடைக்கும் போது செய்துபார்த்து போடுகிறேன்.

இது ஆண்கலுக்கும் நல்லது , மற்றவர்களும் சாபிடலாம்